மீனவர்களுக்கு மீன்பிடி வலைத் தொகுதி வழங்கும் நிகழ்வு.!

266 0

மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு மீன்பிடி வலை தொகுதி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு உதவித் திட்டங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்களுக்கான புதிய வலை உபகரணங்கள் வழங்கும்போது அவை கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதி பெற்றவையாக இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு சேதங்கள் கணக்கிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டைனமைட் (வெடிபொருள்) பயன்படுத்தி மீன்பிடித்த இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று இரண்டு நபர்கள் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு இந்திய இழுவைப் படகுகள் 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளப் பாதுகாப்பு கருதி உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இது குறித்து மீனவர் சங்கங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பாரம்பரிய முறையில் கைகளால் வலை இழுக்க அனுமதி உண்டு. ஆனால் இயந்திரங்கள் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இது குறித்து மீனவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரி கேட்டுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு குறித்த வலைத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என…

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மாத்தறை, கந்தரே பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

Posted by - February 20, 2026 0
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி…

மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத்…

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *