இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்வர்கள் மீது வழக்கு தொடரப்படும் – பொலிஸார் எச்சரிக்கை.!

224 0

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் F.U. வுட்லர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கையில் வாகன ஓட்டும்போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் மொத்தம் 5 வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

, மேலும் 7 கடுமையான விபத்துகள் மற்றும் 78 சுற்றுலாப் பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளானனர் என அவர் குறிப்பிட்டார்.விசாரணைகளில், வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இருவரும் மோட்டார் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்டினர் மீது வழக்கு தொடரப்படும்.

மேலும், ஒரு மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் வாடகைக்கு விட வேண்டும் என்றால், வெளிநாட்டு நபர் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம், இலங்கையில் வசிக்கும் வெளிநாட்வாசிக்கு வழங்கப்படும் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம், அல்லது மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.


இந்த மாற்றுச் சான்றிதழ் வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலும், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு கருமபீடங்களிலும் வழங்கப்படும் என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்தார்.

Related Post

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 16, 2026 0
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16)…

சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற…

ஆசன விவகாரம் : அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா? – ஜெசீதன் கேள்வி.!

Posted by - February 21, 2026 0
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.நேற்றைய பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்   காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *