பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

132 0

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் இரவு நேரங்களில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே (Below freezing) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கை ஞாயிறு இரவு 20:00 மணி முதல் திங்கள் காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் ஆர்க்டிக் பகுதிகளில் இருந்து வீசிய குளிர்ந்த காற்று நாடு முழுவதும் பரவியதால், பனிப்பொழிவு மற்றும் உறைபனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மழை பெய்து வருவதால், சாலைகளில் ‘பிளாக் ஐஸ்’ எனப்படும் கண்ணுக்குத் தெரியாத வழுக்கும் பனிப் படலம் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்து முழுவதும் சுற்றுச்சூழல் முகாமையால் (Environment Agency) 74 வெள்ள எச்சரிக்கைகளும், 195 வெள்ள விழிப்புணர்வுகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இவை பெரும்பாலும் தெற்கு மற்றும் மத்திய (Midlands) பகுதிகளில் நிலவுகின்றன.

இதேவேளை, சென்ட்ரல் (Central), டேஸைட் மற்றும் ஃபைஃப் (Tayside & Fife), கிராம்பியன் (Grampian), ஹைலேண்ட்ஸ் (Highlands) தென்மேற்கு ஸ்காட்லாந்து (South West Scotland) ஸ்ட்ராத்க்லைட் (Strathclyde)
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்ட் (Northumberland) போன்ற பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் முகமையின் வெள்ளப் பணி மேலாளர் ஜொனாதன் டே கூறுகையில், சுமார் 24,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் இருப்பினும் ஏறத்தாழ 330 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் வேல்ஸிலும் (Wales) மூன்று பகுதிகளில் வெள்ள விழிப்புணர்வு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Post

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

Posted by - February 20, 2026 0
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து…

கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

Posted by - February 16, 2026 0
கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

ஜேர்மனியில் புகலிட கோரிக்கை யாளர்களுக்கு வேலை வாய்ப்பு- புதிய திட்டம் அறிவிப்பு.!

Posted by - February 23, 2026 0
ஜேர்மனி அரசு, நாட்டில் புகலிடம் கோரும் புலம்பெயர் மக்கள் விரைவில் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், புலம்பெயர் மக்கள் ஜேர்மனிக்கு…

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு!

Posted by - February 16, 2026 0
காசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு…

மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

Posted by - February 23, 2026 0
மலேசியாவின் சபா மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *