பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

154 0

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் இரவு நேரங்களில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே (Below freezing) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கை ஞாயிறு இரவு 20:00 மணி முதல் திங்கள் காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் ஆர்க்டிக் பகுதிகளில் இருந்து வீசிய குளிர்ந்த காற்று நாடு முழுவதும் பரவியதால், பனிப்பொழிவு மற்றும் உறைபனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மழை பெய்து வருவதால், சாலைகளில் ‘பிளாக் ஐஸ்’ எனப்படும் கண்ணுக்குத் தெரியாத வழுக்கும் பனிப் படலம் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்து முழுவதும் சுற்றுச்சூழல் முகாமையால் (Environment Agency) 74 வெள்ள எச்சரிக்கைகளும், 195 வெள்ள விழிப்புணர்வுகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இவை பெரும்பாலும் தெற்கு மற்றும் மத்திய (Midlands) பகுதிகளில் நிலவுகின்றன.

இதேவேளை, சென்ட்ரல் (Central), டேஸைட் மற்றும் ஃபைஃப் (Tayside & Fife), கிராம்பியன் (Grampian), ஹைலேண்ட்ஸ் (Highlands) தென்மேற்கு ஸ்காட்லாந்து (South West Scotland) ஸ்ட்ராத்க்லைட் (Strathclyde)
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்ட் (Northumberland) போன்ற பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் முகமையின் வெள்ளப் பணி மேலாளர் ஜொனாதன் டே கூறுகையில், சுமார் 24,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் இருப்பினும் ஏறத்தாழ 330 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் வேல்ஸிலும் (Wales) மூன்று பகுதிகளில் வெள்ள விழிப்புணர்வு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Post

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

Posted by - February 19, 2026 0
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

Posted by - February 19, 2026 0
ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத்…

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு.!

Posted by - February 20, 2026 0
தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில…

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - February 19, 2026 0
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *