அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதல் தொடர்பு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இரு குடும்பங்களும் உறவிற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையிலும், இன்று ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து யுவதி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தையடுத்து, குறித்த இளைஞர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
