போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

424 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் வெளியேறிய வெள்ளநீர் காரணமாக வீதி தாழிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 06.02.2026 அன்று ஏற்பட்ட மழையிலும் இவ்வீதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மேற்பார்வையில் தற்காலிக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வீதி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. எனினும், இன்று காலை மீண்டும் 6 அடி அளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் அதிக நீர்வரத்து ஏற்பட்டது; இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதி மீண்டும்அடித்துச் செல்லப்பட்டது.


வேத்துச்சேனை கிராமத்திற்கு இது ஒரே போக்குவரத்துப் பாதையாக இருப்பதால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு, வெல்லாவெளி பிரதேச சபை கனரக வாகனங்களின் உதவியுடன் அவசர சீரமைப்பு பணிகளை முன்னெடுத்தது.

இப்பணிகளில் தவிசாளர் வி. மதிமேனன், வட்டார உறுப்பினர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் இணைந்து வீதியை மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சீரமைத்துள்ளனர்.ஒவ்வொரு முறையும் வான் கதவுகள் திறக்கப்படும்போது வீதி சேதமடைவது தொடர்கதையாக இருப்பதால், நிரந்தரத் தீர்வாக பாலம் அல்லது வலுவான கட்டுமானம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம்!

Posted by - February 19, 2026 0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை கிழக்கு மாகாண பொலிஸ்…

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது.!

Posted by - February 20, 2026 0
தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன்…

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.…

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

Posted by - February 20, 2026 0
காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *