மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

178 0

ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் அரசு காலதாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.


அவர் தெரிவித்ததாவது, புதிய முறைமையா அல்லது பழைய முறைமையா என்பதை ஆராயும் பெயரில் தெரிவுக்குழு அமைப்பது தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும். இதனால் தேர்தல் மேலும் தள்ளிப்போகும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருதுகின்றனர் என்றும் அவர் கூறினார்.


மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் விரைந்து நடத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நிலுவையிலுள்ள தேர்தலை முன்னுரிமையுடன் நடத்த வேண்டியதுஅரசின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.சட்டச் சிக்கல்கள் இருப்பின் அவற்றை விரைவாகத் தீர்த்து, தேர்தலுக்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

Related Post

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

Posted by - February 16, 2026 0
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

காதல் முரண்பாட்டால் காதலி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு.!

Posted by - February 21, 2026 0
அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27…

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை.!

Posted by - February 20, 2026 0
முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச,…

விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது.!

Posted by - February 19, 2026 0
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 549 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

ஆசன விவகாரம் : அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா? – ஜெசீதன் கேள்வி.!

Posted by - February 21, 2026 0
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.நேற்றைய பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *