பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டுக – அனுஷ பல்பிட்ட காட்டம்.!

253 0

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணையில் விடுவித்தது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் கூறியது:


“தற்போதைய அரசில் எவ்வித திட்டமிடலும் இல்லை. அனுபவமிக்க அரச அதிகாரிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பையும் அரசு சீர்குலைத்துள்ளது. இதனால் நேர்மையான அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது.

எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவது கவலைக்குரிய விடயமாகும்.


பழைய சம்பவங்களை கிளறிப் பார்ப்பதை விட, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை காப்பாற்றும் வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். பழிவாங்கும் அரசியலால் நாட்டை முன்னேற்ற முடியாது,” என அனுஷ பல்பிட்ட வலியுறுத்தினார்.

Related Post

குடும்பத் தகராறு கொலையில் முடிவு: மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி.!

Posted by - February 21, 2026 0
கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, ஒரு பிள்ளையின்…

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு – பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று (21) காலை கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகம்…

கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்   காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

இந்தியா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்.!

Posted by - February 21, 2026 0
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *