கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

246 0

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர், முள்ளிவாய்க்காலில் நடந்த இன ஒடுக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியை பெறுவதற்கான போராட்டம் இன்றுடன் 3287 நாட்களாக தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல தாய்மார்கள், உறவுகள் இறந்து விட்டனர்; மீதமுள்ளவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான சரியான தகவல்களை அறிய முன்னெடுக்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.


போராட்டத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியை கடந்து மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் போராட்டம் நிறைவடைந்தது. தங்களின் கோரிக்கைகள்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குசர்வதேச நீதி வழங்குதல், தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை, பயங்கரவாதம் தடுக்கும் சட்டங்கள்[P.T.A மற்றும் PSTA] நீக்கம், வட கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படல், மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் தலையீடு, பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் நிறுத்தம், பெளத்த மயமாக்கல் நிறுத்தம், மற்றும் அனைத்து வகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் ஆகியவை ஆகும்.போருக்குப் பிறகு 16 ஆண்டுகள் கடந்தும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் நீதி பெற முடியாமல் இருப்பதை நினைவூட்டி, சர்வதேச சமூகத்திடம் இச்சம்பவத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

Related Post

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

Posted by - February 20, 2026 0
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை,…

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின்…

விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு; உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்கு கடிதம்.!

Posted by - February 20, 2026 0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.…

சிறையில் அடைத்தாலும் நாமல் வெற்றியடைவார் – மொட்டுக் கட்சி சூளுரை.!

Posted by - February 20, 2026 0
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புதிய சரித்திரச் சாதனையை அவர் படைப்பார்” என்று ஸ்ரீலங்கா…

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

Posted by - February 20, 2026 0
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *