இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டு

392 0

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை, இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகும் எனத் தெரிவித்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடலில் பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் விகாராதிபதி கலந்து கொண்டபோதும், காணிகளை இழந்த மக்கள் அழைக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்த மதத்திற்கும் தொடர்பில்லை என்றும், இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டது இலங்கை இராணுவம் என்பதையே சுட்டிக்காட்டினார். அக்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா இந்த விகாரை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.


“இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் மற்றொரு கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை. எனவே, அரசு இந்த விவகாரத்தில் நீதியான முறையில் தலையிட்டு, காணி உரிமைகளை மக்களுக்கே மீள வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, இவ்வாறான செயல்களுக்கு துணைபோகக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Post

மாகாண சபை தேர்தல் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

Posted by - February 20, 2026 0
நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.…

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

Posted by - February 20, 2026 0
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,…

மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டுக – அனுஷ பல்பிட்ட காட்டம்.!

Posted by - February 21, 2026 0
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *