கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

401 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கல்லுண்டாய் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர வேண்டிய துரதிர்ஷ்டநிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளையினரால் விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நிலம் நிரப்புதல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கலந்துரையாடலின் போது, அருகிலுள்ள கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரப்பட்டு, அங்கிருந்து பெறப்படும் மண்ணைப் பயன்படுத்தி கல்லுண்டாய் குடியேற்றப் பகுதியில் நிலம் நிரப்பும் பணிகளை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், குடியேற்றப் பகுதிக்கு அண்மையில் செல்லும் வாய்க்காலைத் தூர்வாருவதும் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டது.

அத்துடன், கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பின்னர், அதன் பராமரிப்புப் பொறுப்பை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு ஒப்படைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து விரைவான திட்ட மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.


இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இணைப்புச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் தொடர்புடைய அரசியல் நிர்வாக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Post

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

Posted by - February 21, 2026 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு…

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என…

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்!

Posted by - February 16, 2026 0
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின்…

முச்சக்கரவண்டி – நோயாளர் காவு வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து.!

Posted by - February 21, 2026 0
அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான சாலையில் பரதுவ கோட்டா போதி அருகே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நோயாளர் காவு வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்து இன்று (21)…

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *