விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு; உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்கு கடிதம்.!

342 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.

தன்னுடைய உடல்நலக் குறைவு காரணமாக இன்று அந்தப் பிரிவில் முன்னிலையாக முடியாது என்பதை அவர் கடிதம் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

அவர் சிஐடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தான் தற்போது உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாகத் தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டுமெனில், அதனைத் தனது இல்லத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பிரிட்டனுக்கான தனிப்பட்ட பயணத்துக்காக, 1.66 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இந்தநிலையிலேயே, இன்று முன்னிலையாக வேண்டிய பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, தனது இயலாமையை மருத்துவக் காரணங்களைக் காட்டித் தெரிவித்துள்ளார்.

Related Post

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

Posted by - February 20, 2026 0
கடந்த 2025ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்…

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

Posted by - February 20, 2026 0
காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்…

ஹெரோயின், மின்னணு தராசுடன் போதைப்பொருள் வியாபாரி கைது.!

Posted by - February 21, 2026 0
களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக…

மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு…

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *