ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கலாம்; ஆனால் எலும்புகள் உடையாமல், கடுமையான காயங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறான விதிப்பொருளுக்கு பின்பற்றி மட்டுமே கணவருக்கு தண்டனை வழங்கப்படும்.
மேலும், பெண்களை பாதுகாக்கும் முந்தைய சட்டங்களும் தாலிபான் அரசு ரத்து செய்துள்ளது. இதில் ஒருவர் தனது மனைவியை கடுமையாக தாக்கி எலும்புகளை உடைத்தால் அல்லது காயம் ஏற்படுத்தினால், கணவருக்கு 15 நாட்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அதேபோல், கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி உறவினர்களை பார்க்கச் சென்றால், 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் புதிய சட்டம் தெரிவிக்கிறது.இந்த புதிய சட்டங்கள் ஆப்கானிய பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலைத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஆப்கானிய மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
