துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

280 0

துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் களுத்துறை வடக்கு மற்றும் போம்புவல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, நேற்று (19) காலை இக்குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளியின் நிறத்தை மாற்றித் தன்வசம் வைத்திருந்தமை, துப்பாக்கியைக் கடத்தியமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து குறித்த உந்துருளியில் இருந்து அகற்றப்பட்ட பாகங்கள், நிறத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஒரு ஜோடி போலி இலக்கத் தகடுகள் மற்றும் போலி வருமான வரி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட பொருட்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக களுத்துறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

சிவனடிபாத மலையில் உள்ள வனப் பகுதியில் திடீர் தீப்பரவல்.!

Posted by - February 19, 2026 0
இன்று சிவனடிபாத மலை உச்சிக்கு முன்னால் அமைந்துள்ள வனப் பகுதியில் இன்று (19) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நிலவும் கடும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று…

எல்லை மீறல் நியாயமற்றது : தமிழக மீனவர்கள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கடும் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து…

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித தலைமையில் விசேட குழு நியமனம்.!

Posted by - February 20, 2026 0
நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வரும் மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இன்று…

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்   காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *