துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

370 0

துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் களுத்துறை வடக்கு மற்றும் போம்புவல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, நேற்று (19) காலை இக்குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளியின் நிறத்தை மாற்றித் தன்வசம் வைத்திருந்தமை, துப்பாக்கியைக் கடத்தியமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து குறித்த உந்துருளியில் இருந்து அகற்றப்பட்ட பாகங்கள், நிறத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஒரு ஜோடி போலி இலக்கத் தகடுகள் மற்றும் போலி வருமான வரி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட பொருட்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக களுத்துறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Posted by - February 21, 2026 0
இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை (22) முற்பகல்…

பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டுக – அனுஷ பல்பிட்ட காட்டம்.!

Posted by - February 21, 2026 0
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,…

எல்லை மீறல் நியாயமற்றது : தமிழக மீனவர்கள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கடும் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து…

மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு…

தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

Posted by - February 21, 2026 0
தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *