எவரையும் கைவிடாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்

276 0

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நெறிமுறைகள் மற்றும் மனிதக் கவனத்துடன் முன்னெடுக்கப்படுவதை இலங்கை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.


இந்த ஆரம்ப நிகழ்வில் நரேந்திர மோடி, இம்மானுவேல் மக்ரோன், லூலா டி சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.ஜனாதிபதி, AI தொழில்நுட்பம் இலங்கை தனித்து மட்டுமல்ல, பிராந்திய பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பு மூலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்பாக, மையப்படுத்தப்பட்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள், பாதுகாப்புக் கருவிகள் மற்றும் கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய நான்கு அடிப்படை விடயங்களை முன்மொழிந்தார்.அவரது கருத்துப்படி, AI தொழில்நுட்பம் சில மொழிகள் மற்றும் கலாசாரங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், இலங்கையின் தனித்துவமான கலாசார பன்முகத்தன்மை இழக்கப்படும் அபாயம் உள்ளது.

அதற்காக உள்ளூர் மொழிகளை டிஜிட்டல் மயப்படுத்தி AI கட்டமைப்பில் ஒருங்கிணைப்பது அவசியமாகும்.மேலும், இலங்கையில் தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், டேட்டா பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்புக்கான சட்ட கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், இந்தியா போன்ற நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பான பிராந்திய AI தரவு மையங்களை உருவாக்க இலங்கை தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Post

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

Posted by - February 20, 2026 0
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தின் காவலில் இருந்தபோது பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்…

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என…

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்.!

Posted by - February 19, 2026 0
நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள்…

வட்டவளையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பாரவூர்தி – இருவர் படுகாயம்.!

Posted by - February 21, 2026 0
வட்டவளை பகுதியில் 20 அடி பள்ளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான…

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *