பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

304 0

உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.


இந்த ஜோடி 2025 ஜனவரி 3-ஆம் திகதி மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது கைது செய்யப்பட்டார், பின்னர் அவர்களுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால், தம்பதியர் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ளனர்.


கடந்த ஒக்டோபர் மாதத்தில், தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் நீடித்த விசாரணையில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஆனால், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தார் தெரிவித்தார்.

குடும்பத்தார் கூறியதாவது, இந்தத் தண்டனை “ஈரானில் இங்கிலாந்து குடிமக்கள் மீதான மிகக் கடுமையான அரசியல் நோக்கம் கொண்ட தடுப்புக் காவல் நடவடிக்கை” எனும் வகையிலாகும்.

எனவே, அவர்களை விடுதலை செய்ய இங்கிலாந்து அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.மேலும், ஈரானிய அதிகாரிகளால் உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தார் குறிப்பிட்டனர்.

Related Post

நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய சுரங்கம் – தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில்…

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

Posted by - February 19, 2026 0
ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத்…

கிரீன்லாந்து விவகாரம் தீவிரம்: அமெரிக்க கருத்துக்கிடையில் டென்மார்க் மன்னர் பயணம்.!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அந்தத் தீவு மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் டென்மார்க் மன்னர்…

ஜேர்மனியில் புகலிட கோரிக்கை யாளர்களுக்கு வேலை வாய்ப்பு- புதிய திட்டம் அறிவிப்பு.!

Posted by - February 23, 2026 0
ஜேர்மனி அரசு, நாட்டில் புகலிடம் கோரும் புலம்பெயர் மக்கள் விரைவில் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், புலம்பெயர் மக்கள் ஜேர்மனிக்கு…

சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

Posted by - February 19, 2026 0
சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜெரி இரவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *