தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

220 0

தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகளை மீள எமக்கு ஒப்படைக்குமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு எமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை.

எமது காணிகள் எமக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தும் அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். இருந்தபோதிலும், எமது கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படாமல் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


எம்மை அழைக்காமல், எமது காணிகளை ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டப்படும் விகாராதிபதியை அழைத்து கலந்துரையாடல் நடத்துவது, அந்த ஆக்கிரமிப்புக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதாகவே எங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது,” என தெரிவித்தனர்.

மேலும், இவ்விடயத்தில் சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, காணி உரிமை தொடர்பான உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளும் சமமாகக் கேட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Related Post

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் பிரணவசோதி உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இளம் மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (31) அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.காரைதீவுவைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர்…

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!

Posted by - February 20, 2026 0
ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *