ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

305 0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதேவேளை, இக்குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வத்தளை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்று, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


இக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட நால்வர், நீண்ட நாள்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று…

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Posted by - February 24, 2026 0
கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து…

விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து…

சிறையில் அடைத்தாலும் நாமல் வெற்றியடைவார் – மொட்டுக் கட்சி சூளுரை.!

Posted by - February 20, 2026 0
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புதிய சரித்திரச் சாதனையை அவர் படைப்பார்” என்று ஸ்ரீலங்கா…

வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு:பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

Posted by - February 19, 2026 0
வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *