முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இக்குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வத்தளை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்று, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட நால்வர், நீண்ட நாள்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
