எல்லை மீறல் நியாயமற்றது : தமிழக மீனவர்கள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கடும் கண்டனம்.!

440 0

வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து கொண்டு தங்களுக்கு நியாயம் கோருவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.மன்னார் அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி கரையோரம் வரை வந்து தொழிலில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டினார்.


அண்மையில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் 6 படகுகள் மற்றும் 47 பேர் (25 பேர் ஒரு குழுவாகவும், 22 பேர் ஒரு குழுவாகவும்) கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை மீறி வருவதாகவும், அவ்வப்போது சில படகுகள் மட்டுமே கைது செய்யப்படுவது போதுமான நடவடிக்கையல்லஎன்றும் தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லை ஒரு இறையாண்மை கொண்ட பகுதி என்பதால், அதை மீறி நுழையும் போது கைது தவிர்க்க முடியாதது என அவர் வலியுறுத்தினார்.

மேலும், எல்லை மீறி வருவது மட்டுமல்லாமல், கடல் வளங்களை சுரண்டுதல், உபகரணங்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.கைது செய்யப்பட்ட பின்னரும், மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்தார்.

குற்றச் செயலை செய்து விட்டு அதை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் இந்த விடயத்தில் தலையிட்டு எல்லை மீறலைத் தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.


மேலும், இந்திய மீனவர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Post

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய…

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி இலங்கையில்: பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து உயர்மட்டச் சந்திப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி, நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

Posted by - February 21, 2026 0
தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக…

ஜனாதிபதி அநுர – பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின் புதுடில்லியில்…

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Posted by - February 16, 2026 0
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *