தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமானம் 2024ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரித்துள்ளது, அதற்கான முக்கிய காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘
டித்வா’ புயலின் தாக்கம் இருந்தபோதிலும், பூங்காக்களின் இயற்கை மற்றும் தாவரவியல் ஈர்ப்புகள் மூலம் வருமானம் உயர்ந்துள்ளது. திணைக்களத்தின் கீழ் பேராதனை, ஹக்கலா, கம்பஹா, சீதாவக்க ஈர வலய, மிரிஜ்ஜவில வறண்ட வலய மற்றும் கணேவத்த வன மூலிகைத் தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன; இதில், பேராதனை பூங்காவிற்கு கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அனைத்து பூங்காக்களையும் பார்வையிட இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டசுற்றுலாப் பயணிகள் வந்தனர். நுழைவுக் கட்டணம், தாவர விற்பனை மற்றும் இதர வசதிகள் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
