விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு; உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்கு கடிதம்.!

251 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.

தன்னுடைய உடல்நலக் குறைவு காரணமாக இன்று அந்தப் பிரிவில் முன்னிலையாக முடியாது என்பதை அவர் கடிதம் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

அவர் சிஐடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தான் தற்போது உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாகத் தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டுமெனில், அதனைத் தனது இல்லத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பிரிட்டனுக்கான தனிப்பட்ட பயணத்துக்காக, 1.66 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இந்தநிலையிலேயே, இன்று முன்னிலையாக வேண்டிய பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, தனது இயலாமையை மருத்துவக் காரணங்களைக் காட்டித் தெரிவித்துள்ளார்.

Related Post

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்.!

Posted by - February 19, 2026 0
நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள்…

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

Posted by - February 20, 2026 0
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி…

யாழ். பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா; முகாமைத்துவ பீடத்தில் 7 தங்கப் பதக்கங்களைச் சூடிய மாணவி.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளைமறுதினம்…

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - February 16, 2026 0
2026 பெப்ரவரி 18 முதல் சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு போதுமான பதிலை வழங்கத்…

இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொ*லை – கணவர் தப்பியோட்டம்.!

Posted by - February 21, 2026 0
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *