வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

209 0

வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். இதன்போது, வடக்கு மாகாணத்தில் நிழல் அமைச்சர்களை நியமித்து அவர்கள் ஊடாக ஆட்சியைக் கொண்டுநடத்துமாறு அவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

சுகாதாரத்துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜாவும், கல்வி அமைச்சுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனும், மகளிர் விவகாரத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனும், உள்ளூராட்சி சபைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சு சார்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா அதில் அழைக்கப்பட்டிருந்தார். எந்த அடிப்படையில் அவரை அழைத்தீர்கள்? அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகக் கேவலமான மனோநிலை.

வடக்கு மாகாண சபைக்கு எதிரானவர்கள் என்றும், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடி உயிர்த் தியாகம்கூட செய்தவர்கள் எனவும் கூறுகின்றீர்கள். ஆனால், அதே மாகாண சபைக் கட்டமைப்பில் திருட்டுத்தனமாக உங்களின் ஆட்களைப் புகுத்துகின்றீர்கள். இதுவொரு முதுகெலும்பில்லாத பண்பு. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என அரசைக் கோருகின்றோம்.” – என்றார்.

Related Post

இந்தியா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்.!

Posted by - February 21, 2026 0
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று…

அம்பாறையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை; தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்.!

Posted by - February 20, 2026 0
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை பெய்து வருவதன் காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் முறிந்துள்ளதுடன்…

ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - February 21, 2026 0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் உடலம், பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை.!

Posted by - February 19, 2026 0
மாத்தளை காவல் பிரிவின் கலல்பிட்டி பகுதியில் உள்ள பரகெடி ஓயா எறும்புப் புற்றுக்கு மேலே உள்ள ஒரு பாறைக்கு அருகில் ஒரு சிதைந்த ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது…

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

Posted by - February 19, 2026 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *