மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

203 0

சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆய்வமைப்புகள் இணைந்து, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி பொதுமக்களிடம் ஆய்வு நடத்தி முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளன.

அதில் 58 சதவிகித கனேடியர்கள் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல எனக் கூறியுள்ளனர்.அதே கருத்து பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்க மக்களிடையிலும் காணப்படுகின்றது. மேலும், 57 சதவிகித பேர் ஆபத்து மற்றும் சவால்கள் எழும் நேரத்தில் அமெரிக்காவை நம்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான கனேடியர்கள், அமெரிக்கா மற்ற நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதைவிட, பிரச்சினைகளை உருவாக்குவதாக கருதுகிறார்கள்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டியதும், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததும், அமெரிக்கா குறித்த கனேடியர்களின் எண்ணத்தை பெரிதும் பாதித்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

Related Post

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

Posted by - February 16, 2026 0
லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது…

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய பனிப்புயல்.!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா- நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று இரவு முதல் நகரம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள்…

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

Posted by - February 19, 2026 0
நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பிரையர் ஹில்…

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

Posted by - February 19, 2026 0
அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு செலவுகள் மற்றும் பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கை காரணமாக ஊழியர்களின் பணி நேரத்தையும் வேலைகளையும் குறைக்க இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான பெரிய…

ரஷ்யா – உக்ரைன் மோதல் மீண்டும் தீவிரம்.!

Posted by - February 23, 2026 0
பெப்ரவரி 22, 2026 அன்று, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய இரவு தாக்குதலை நடத்தியது . இதில் 50 ஏவுகணைகள் மற்றும் 297 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.உக்ரைன் விமானப்படை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *