வங்கதேச வான்வெளியில் இந்திய விமானமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் , வங்கதேச வான்வெளியை பயன்படுத்துவதற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததால் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஸ்பைஸ் ஜெட் இந்தியாவின் நான்காவது பெரிய விமானசேவை வழங்கும் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
