தி.மு.க வுடன் இணைந்த தே.மு.திக.!

244 0

தேமுதிக கட்சி நேற்று (19) அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.

முதல்வரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும். 2016-ல் இது அமைந்திருக்க வேண்டியது, பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி கூறியதைப்போல் இப்போது அது நிகழ்ந்திருக்கிறது” என கூறினார்.


விஜய்காந்த் உருவாக்கிய தேமுதிக கட்சி முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி என, பிரேமலதாவையும் கட்சி நிர்வாகிகளையும் வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Post

கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

Posted by - February 15, 2026 0
கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.…

கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் தொலைபேசி பயன்படுத்த தடை.!

Posted by - February 23, 2026 0
மொபைல் போன்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவதைத் தடுக்கும் நோக்கில், 16 வயதிற்குட்பட்டோர் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக மாநில…

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

Posted by - February 19, 2026 0
நேற்று, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளமைக்கு ஏற்ப பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து…

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில்.!

Posted by - February 19, 2026 0
தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Posted by - February 16, 2026 0
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *