மொபைல் போன்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவதைத் தடுக்கும் நோக்கில், 16 வயதிற்குட்பட்டோர் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் மொபைல் போன்களுக்கு அதிகம் அடிமையாகி வருவது கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்தியாவிலும் இதுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
