ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

237 0

ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான ஒப்பந்தத்தை முடக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.


சர்வதேசச் சட்டம் மீறப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, டியாகோ கார்சியா தீவு அல்லது குளோசெஸ்டர்ஷையர் மாகாணத்தில் அமைந்துள்ள அரச வான்படைத் தளத்திலிருந்து எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதியை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டார்மரின் இந்த முடிவு, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளை மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.முன்னதாக, ஈரான் கடற்பரப்பிற்கு அருகில் பெரும் போர்க்கப்பலை நிலைநிறுத்திய ட்ரம்ப், அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமைதி ஒப்பந்தத்தை பத்து நாட்களுக்குள் எட்ட வேண்டும் என ஈரான் அரசை எச்சரித்திருந்தார்.

இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதன்கிழமை இரவு சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை வெளியிட்ட ட்ரம்ப், முக்கியமான இந்தத் தீவின் கட்டுப்பாட்டை இழப்பது பெரிய தவறாகும் என பிரித்தானிய அரசை எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், டியாகோ கார்சியா உள்ளிட்ட தளங்களிலிருந்து தாக்குதல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகள், பிரித்தானியா உட்பட பல நாடுகளை பாதுகாப்பதற்காகவே என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

Related Post

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

Posted by - February 20, 2026 0
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து…

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - February 19, 2026 0
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை…

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

Posted by - February 19, 2026 0
ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத்…

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு!

Posted by - February 16, 2026 0
காசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *