அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

282 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஈரான் புதிய ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த அவர், இதற்காக 10 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த பத்து நாட்களில் இதுகுறித்து பல தகவல்கள் வெளியாகும் என்றும், வழங்கப்பட்ட காலம் போதுமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் தரப்பும் கடுமையான பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் குறிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஈரான்கடிதம் அனுப்பி, தாம் தன்னிச்சையாகப் போரைத் தொடங்கமாட்டோம் எனவும், ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் தற்காப்பு உரிமையின் அடிப்படையில் பதிலடி வழங்கும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!

Posted by - February 19, 2026 0
ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் கனடா புதன்கிழமை (19) புதிய…

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து .!

Posted by - February 23, 2026 0
நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை…

நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

Posted by - February 19, 2026 0
தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர்…

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

ஜேர்மனியில் புகலிட கோரிக்கை யாளர்களுக்கு வேலை வாய்ப்பு- புதிய திட்டம் அறிவிப்பு.!

Posted by - February 23, 2026 0
ஜேர்மனி அரசு, நாட்டில் புகலிடம் கோரும் புலம்பெயர் மக்கள் விரைவில் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், புலம்பெயர் மக்கள் ஜேர்மனிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *