தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர் போர் நடவடிக்கையில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், நைஜீரியப் படையினரே அனைத்து பாதுகாப்பு முடிவுகளிலும் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பர் என்றும் அவர் கூறினார்.
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் தினத் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா இராணுவத்தினரை அனுப்பி வைப்பதை முதன் முதலாக ஒப்புக் கொண்டுள்ளது.
இதேவேளை, நைஜீரிய பாதுகாப்புத் தலைமையகத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமைலா உபா, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க அபுஜா அமெரிக்க படையினரின் உதவியைக் கோரியதாக ரொய்ட்டர்ஸிடம் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க படையினர் எப்போது வருவர் என்பதைக் கூற மறுத்துள்ள அவர் அமெரிக்க- நைஜீரியா கூட்டுப் பணிக்குழுவின் கீழ் நடந்து வரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
