தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

288 0

இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தென் கொரிய நீதிமன்றம் இன்று (19) அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பித்தது.

2024 டிசம்பரில் யூன் சுக் இயோல் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது தேசிய சட்டமன்றத்தை முடக்கும் நோக்கம் கொண்டது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

வழக்கு விசாரணையில் மரண தண்டனை விதிக்குமாறு சட்டத்தரணிகள் மனுவில் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் 65 வயதான முன்னாள் ஜனாதிபதிக்கு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.எனினும், யூன் சுக் இயோல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இராணுவச் சட்டத்தை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைத் தடுப்பது குறித்து எச்சரிக்கை விடுப்பதை நோக்கமாகக் கொண்டதாக அவரது நடவடிக்கை இருப்பதாகவும் வாதிட்டார்.

தென் கொரிய சட்டத்தின் கீழ் ஒரு கிளர்ச்சியை திட்டமிட்டு நடத்துவதுவதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.தென் கொரியா இறுதியாக 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனையை வழங்கியது, ஆனால் 1997 முதல் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

Posted by - February 19, 2026 0
நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பிரையர் ஹில்…

நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

Posted by - February 19, 2026 0
தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர்…

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

Posted by - February 19, 2026 0
இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு…

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

Posted by - February 19, 2026 0
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *