ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

259 0

ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஆயுதங்கள் மற்றும் படைத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, ஈரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் ட்ரம்ப் முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. அலி காமெனீ தலைமையிலான ஈரான், அணுசக்தி திட்டங்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

2003ஆம் ஆண்டு ஈராக் போர்க்கு பின்னர் நடைபெறக்கூடிய மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது அமையக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. மத்திய கிழக்கு தளங்களுக்கு இரண்டு விமானம்தாங்கிக் கப்பல்கள், பல போர்க்கப்பல்கள், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

F-35, F-22, F-16 போன்ற மேம்பட்ட போர் விமானங்களும் அப்பகுதிக்குத் திரட்டப்பட்டுள்ளன. மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இறுதி முடிவு குறித்து உலகளாவிய கவனம் திரண்டுள்ளது.

Related Post

மத்திய கிழக்கில் பதற்றம்: ஜேர்மன் படைகள் எர்பில் நகரிலிருந்து தற்காலிக விலகல்.!

Posted by - February 20, 2026 0
மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிப்பதால், ஜேர்மனி தனது படைகளின் அளவைக் குறைக்கும் முடிவெடுத்துள்ளது. குர்திஸ்தான் பகுதியிலுள்ள ஈராக்கின் தலைநகரான எர்பில் நகரில் ஜேர்மன் ராணுவம்…

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!

Posted by - February 19, 2026 0
ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் கனடா புதன்கிழமை (19) புதிய…

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு…

இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதற்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.!

Posted by - February 20, 2026 0
2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற…

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

Posted by - February 16, 2026 0
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *