இந்தியா – இலங்கை உறவில் புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு.!

251 0

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.


புதுடில்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபம் மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய இணக்கப்பாடு குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, புதுடில்லியில் நடைபெற்று வரும் AI Impact Summit 2026 சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா பயணமானார்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அமர்வில் கலந்துகொண்ட அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மனித குல நலனுக்காகவும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.மேலும், சர்வதேச தொழில்நுட்ப ஆளுமை மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.

உலக நாடுகளின் அரசத் தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், சுமார் 20 நாடுகளின் தலைவர்களும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

Related Post

காதல் முரண்பாட்டால் காதலி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு.!

Posted by - February 21, 2026 0
அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27…

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!

Posted by - February 20, 2026 0
ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

Posted by - February 26, 2026 0
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Posted by - February 21, 2026 0
இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை (22) முற்பகல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *