ஜேர்மனியில் புகலிட கோரிக்கை யாளர்களுக்கு வேலை வாய்ப்பு- புதிய திட்டம் அறிவிப்பு.!

125 0

ஜேர்மனி அரசு, நாட்டில் புகலிடம் கோரும் புலம்பெயர் மக்கள் விரைவில் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், புலம்பெயர் மக்கள் ஜேர்மனிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை, புலம்பெயர்ந்தோர் வேலை பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. புதிய திட்டத்தின் மூலம், அவர்கள் புகலிடம் தொடர்பான விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருந்தாலும் வேலை செய்ய முடியும்.இங்கு வரும் அனைவரும் விரைவில் வேலை செய்ய வேண்டும். வேலை வாய்ப்பே சிறந்த ஒருங்கிணைப்பு வழி,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் சம்பாதிக்கும் வருமானம், அவர்கள் பெறும் சமூக நலன்களுடன் சமநிலைப்படுத்தப்படும். ஆனால் தவறான தகவல் வழங்குபவர்கள் அல்லது அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படமாட்டார்கள்.

இந்த மாற்றம், ஜேர்மனியில் வேலைவாய்ப்பு சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேசமயம், சமூகத்தில் புலம்பெயர்ந்தோர் விரைவில் இணைந்து வாழ உதவும்.சமூகத்தில் ஒருங்கிணைப்பு, வேலை வாய்ப்பின் மூலம் எளிதாகும் என அரசு நம்புகிறது. இந்த திட்டம், ஜேர்மனியின் குடியேற்றக் கொள்கையில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related Post

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

Posted by - February 16, 2026 0
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு…

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப்…

வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட டிரம்ப் உத்தரவு.!

Posted by - February 20, 2026 0
வேற்றுகிரகவாசிகள் தொடர்பான அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் நெவாடா பகுதியில் ”ஏரியா-51”ல் வேற்றுகிரகவாசியை வைத்து ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *