இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

284 0

வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
சு. இராமச்சந்திரன், 15.02.2007 அன்று துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதன் 19ஆவது ஆண்டு நினைவாக, இன்று (21) காலை பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் போது மகஜரும் வாசிக்கப்பட்டது.


அந்த மகஜரில், இராணுவத்தினரும் அக்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களும் இணைந்து இடம்பெற்ற கைது மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு இதுவரை உரிய நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பரணகம ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும்இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இராமச்சந்திரன் கைது செய்யப்பட்ட பின்னர் சில நாட்கள் தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், தாம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே சாட்சியாக சகோதரி மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2004–2010 காலகட்டத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர் எனவும், தமிழ் ஊடக நிறுவனங்கள் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், மீதமுள்ள சாட்சிகள் மௌனமாகுமுன், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் சுயாதீன சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மகஜரின் பிரதிகள் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

மீனவர்களுக்கு மீன்பிடி வலைத் தொகுதி வழங்கும் நிகழ்வு.!

Posted by - February 19, 2026 0
மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில்…

அக்குரேகொட படுகொ*லை விவகாரம் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து…

பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டுக – அனுஷ பல்பிட்ட காட்டம்.!

Posted by - February 21, 2026 0
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,…

வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *