சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

296 0

மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடனைச் செலுத்திய பின்னரும், சம்பந்தப்பட்ட கந்துவட்டி கும்பல் தொடர்ந்து பணம் கோரி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,“தமிழ் மக்களின் இன விடுதலைக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிராக தமது இளமைக் காலத்தை முழுவதும் அர்ப்பணித்த முன்னாள் போராளிகள், இப்போது குடும்ப வாழ்க்கையில் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


அன்றாட வாழ்வாதாரச் சுமையை தாங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத காரணத்தால், பலர் கடன் மற்றும் சீட்டு போன்ற வழிகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையைச் சுரண்டி, வட்டி மேல் வட்டி விதித்து ஏமாற்றும் கந்துவட்டி கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன.


அதன் விளைவாகவே, மண்ணுக்காக போராடிய இந்தப் பெண் போராளி தனது சிறுநீரகத்தை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவமாகும்.கவலைக்குரிய விடயம்விடயம் என்னவென்றால், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கந்துவட்டி கும்பலும் கைது செய்யப்படவில்லை. மாறாக, வறுமையால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியையே சமூகத்தின் ஒரு பகுதி விமர்சித்து வருகின்றது.


கடன் தொல்லையால் தமிழர் பகுதிகளில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு பெண்ணுக்கே நேர்ந்த துயரம் அல்ல; ஒவ்வொரு தமிழ் மற்றும் இலங்கை குடிமகனுக்கும் நேர்ந்த அவலமாகும்.எனவே, இச்சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த ஜனநாயக நாட்டில் கந்துவட்டி நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி, கந்துவட்டி இல்லாத நியாயமான சமூகத்தை உருவாக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக தமிழ்தேசிய மக்கள் கூட்டணி இணைத் தலைவராகவும் செயல்படும் வேந்தன், முன்னாள் போராளிகளின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரிதமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Post

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
மஹியங்கனை – மெதஓயா பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) மதியம் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.…

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

Posted by - February 20, 2026 0
கடந்த 2025ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

Posted by - February 20, 2026 0
மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *