தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

261 0

தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகளை மீள எமக்கு ஒப்படைக்குமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு எமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை.

எமது காணிகள் எமக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தும் அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். இருந்தபோதிலும், எமது கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படாமல் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


எம்மை அழைக்காமல், எமது காணிகளை ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டப்படும் விகாராதிபதியை அழைத்து கலந்துரையாடல் நடத்துவது, அந்த ஆக்கிரமிப்புக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதாகவே எங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது,” என தெரிவித்தனர்.

மேலும், இவ்விடயத்தில் சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, காணி உரிமை தொடர்பான உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளும் சமமாகக் கேட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Related Post

ஜனாதிபதி அநுர – பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின் புதுடில்லியில்…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
மஹியங்கனை – மெதஓயா பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) மதியம் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.…

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்!

Posted by - February 16, 2026 0
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின்…

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *