பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான Paris நகரில் இடம்பெற்ற சாலை விபத்தில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பரிசின் வடக்குப் பகுதியான 10ஆம் வட்டாரத்தில், பார்பேஸ்–ரோஷ்சுவார் நிலையம் அருகில், குறித்த பெண் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, கனரக வாகனத்துடன் மோதியுள்ளார்.
எதிர்பாராத விதமாக வாகனத்தின் கீழ் சிக்கியதால் அவர் கடுமையாகக் காயமடைந்தார்.படுகாயமடைந்த அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இளம் வயதில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
