வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு:பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

389 0

வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி களப் பயணமும் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக, பிரதி அமைச்சர் பொறியியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவ, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன், பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கப்டன் தமிந்த் ரம்புக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்குழுவினரை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து, ஆளுநர் செயலகத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் இளைஞர்களுக்கான கல்வி முன்னெடுக்கல் குறித்த விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.


கலந்துரையாடலுக்குப் பிறகு, குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரில் சென்று அங்கு அன்றாட சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடமிருந்து விளக்கமறிந்தனர். விமான நிலையத்தின் தற்போதைய தேவைகள், கட்டுமானப் பணிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

Related Post

இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

Posted by - February 21, 2026 0
வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என…

இலங்கை லொத்தர் வரலாற்றில் சாதனை; 62 கோடி ரூபாய் பரிசுத் தொகை வென்ற நபர்.!

Posted by - February 20, 2026 0
இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசுத் தொகை நேற்று (19) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய்…

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது.!

Posted by - February 20, 2026 0
தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன்…

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் தப்பியோட்டம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

Posted by - February 20, 2026 0
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தின் காவலில் இருந்தபோது பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்…

குடும்பத் தகராறு கொலையில் முடிவு: மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி.!

Posted by - February 21, 2026 0
கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, ஒரு பிள்ளையின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *