தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

165 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்பரப்பை மீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


கடல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், 10 பேரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கைப்பற்றி தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கு நடைபெற்ற மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர், அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை பரிசீலித்த மன்னார் நீதவான், குறித்த 10 மீனவர்களையும் மார்ச் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Post

யாழ். பல்கலையில் 40 ஆவது பட்டமளிப்பு விழா: இன்று மூன்றாம் நாள் அமர்வுகள்.!

Posted by - February 21, 2026 0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்த்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெற்றன.கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இவ்விழா, நாளை ஞாயிற்றுக்கிழமை…

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

Posted by - February 20, 2026 0
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி…

குடும்பத் தகராறு கொலையில் முடிவு: மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி.!

Posted by - February 21, 2026 0
கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, ஒரு பிள்ளையின்…

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

இந்தியப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி.!

Posted by - February 20, 2026 0
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (20) நண்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சந்தித்தார். AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *