நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

208 0

தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர் போர் நடவடிக்கையில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், நைஜீரியப் படையினரே அனைத்து பாதுகாப்பு முடிவுகளிலும் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பர் என்றும் அவர் கூறினார்.

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் தினத் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா இராணுவத்தினரை அனுப்பி வைப்பதை முதன் முதலாக ஒப்புக் கொண்டுள்ளது.

இதேவேளை, நைஜீரிய பாதுகாப்புத் தலைமையகத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமைலா உபா, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க அபுஜா அமெரிக்க படையினரின் உதவியைக் கோரியதாக ரொய்ட்டர்ஸிடம் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படையினர் எப்போது வருவர் என்பதைக் கூற மறுத்துள்ள அவர் அமெரிக்க- நைஜீரியா கூட்டுப் பணிக்குழுவின் கீழ் நடந்து வரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Post

சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

Posted by - February 19, 2026 0
சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜெரி இரவு…

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்!

Posted by - February 20, 2026 0
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான Paris நகரில் இடம்பெற்ற சாலை விபத்தில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பரிசின் வடக்குப் பகுதியான 10ஆம் வட்டாரத்தில், பார்பேஸ்–ரோஷ்சுவார் நிலையம்…

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தற்காலிக வரி அதிகரிப்பு!

Posted by - February 23, 2026 0
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.இதற்கமைய, குறித்த வரியின்…

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - February 19, 2026 0
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை…

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

Posted by - February 20, 2026 0
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *