சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

321 0

கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் நாடு முழுவதுமுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் கறுப்புப் பட்டிகளை அணிந்து கடமைகளில் ஈடுபட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 26 ஆம் திகதி நிதி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்புகளுடன் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது.குறித்த பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூடி, தமது தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டு

Posted by - February 20, 2026 0
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை, இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகும் எனத் தெரிவித்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு காணிகளை…

விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

Posted by - February 20, 2026 0
மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

எல்லை மீறல் நியாயமற்றது : தமிழக மீனவர்கள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கடும் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து…

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

Posted by - February 20, 2026 0
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *