போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

292 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் வெளியேறிய வெள்ளநீர் காரணமாக வீதி தாழிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 06.02.2026 அன்று ஏற்பட்ட மழையிலும் இவ்வீதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மேற்பார்வையில் தற்காலிக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வீதி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. எனினும், இன்று காலை மீண்டும் 6 அடி அளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் அதிக நீர்வரத்து ஏற்பட்டது; இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதி மீண்டும்அடித்துச் செல்லப்பட்டது.


வேத்துச்சேனை கிராமத்திற்கு இது ஒரே போக்குவரத்துப் பாதையாக இருப்பதால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு, வெல்லாவெளி பிரதேச சபை கனரக வாகனங்களின் உதவியுடன் அவசர சீரமைப்பு பணிகளை முன்னெடுத்தது.

இப்பணிகளில் தவிசாளர் வி. மதிமேனன், வட்டார உறுப்பினர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் இணைந்து வீதியை மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சீரமைத்துள்ளனர்.ஒவ்வொரு முறையும் வான் கதவுகள் திறக்கப்படும்போது வீதி சேதமடைவது தொடர்கதையாக இருப்பதால், நிரந்தரத் தீர்வாக பாலம் அல்லது வலுவான கட்டுமானம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய…

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Posted by - February 21, 2026 0
இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை (22) முற்பகல்…

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித தலைமையில் விசேட குழு நியமனம்.!

Posted by - February 20, 2026 0
நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வரும் மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இன்று…

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Posted by - February 24, 2026 0
கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து…

சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *