தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடங்கியபோதும், காணிகளை விடுவிப்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு இதற்கான தீர்வை காண முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கலந்துரையாடலில் பௌத்த சாசன அமைச்சக அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி கலந்து கொண்டனர்; இருப்பினும், மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தும் நயினாதீவு மற்றும் ஆரியகுளம் விகாராதிபதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அழைக்கப்படவில்லை.
காணிகளுக்கான உரிய ஆவணங்கள் பொதுமக்களால் முறையாக வழங்கப்பட்டிருந்த போதிலும், திஸ்ஸ விகாராதிபதியால் எந்த முறையான ஆவணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் எதுவும்எடுக்கப்படாமல் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டக் கலந்துரையாடல் விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
