கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

302 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கல்லுண்டாய் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர வேண்டிய துரதிர்ஷ்டநிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளையினரால் விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நிலம் நிரப்புதல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கலந்துரையாடலின் போது, அருகிலுள்ள கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரப்பட்டு, அங்கிருந்து பெறப்படும் மண்ணைப் பயன்படுத்தி கல்லுண்டாய் குடியேற்றப் பகுதியில் நிலம் நிரப்பும் பணிகளை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், குடியேற்றப் பகுதிக்கு அண்மையில் செல்லும் வாய்க்காலைத் தூர்வாருவதும் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டது.

அத்துடன், கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பின்னர், அதன் பராமரிப்புப் பொறுப்பை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு ஒப்படைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து விரைவான திட்ட மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.


இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இணைப்புச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் தொடர்புடைய அரசியல் நிர்வாக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Post

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மாத்தறை, கந்தரே பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.!

Posted by - February 20, 2026 0
“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல,…

ஹெரோயின், மின்னணு தராசுடன் போதைப்பொருள் வியாபாரி கைது.!

Posted by - February 21, 2026 0
களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *