பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

162 0

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பு நியூயோர்க்கிற்கான பிரித்தானிய தூதராக இருந்தபோது, ஊழியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாகவும், பணியிடத்தில் பயம் மற்றும் கவலை நிலவிய சூழலை உருவாக்கியதாகவும் ஆவணங்கள் வெளிவந்துள்ளன.

மேலும், அரசாங்க நலன்களை விட தனிப்பட்ட சுய விளம்பரத்திற்கும் சமூக வலைத்தளச் செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை வழங்கியதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருப்பினும், இவ்விவகாரத்தில் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ முறைப்பாடு மட்டுமே கிடைத்ததாகவும், விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் முன்னாள் அதிகாரிகள்பல ஊழியர்கள் அவதிப்பட்டதாகக் கூறியுள்ள நிலையில், அக்காலகட்டத்தில் சுமார் 47 விழுக்காடு ஊழியர்கள் பணியிடத் துன்புறுத்தலை அனுபவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது உள்துறை அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றும் அந்தோனியா ரோமியோ, சவாலான பணிகளைச் செய்து முடிக்கும் திறமை கொண்டவர் என சிலர் பாராட்டினாலும், இத்தகைய சர்ச்சைகள் அவர் சிவில் சேவையின் மிக உயர்ந்த பதவியான அமைச்சரவை செயலாளர் பதவிக்கான நியமனத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு.!

Posted by - February 20, 2026 0
தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில…

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

Posted by - February 19, 2026 0
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதற்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.!

Posted by - February 20, 2026 0
2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *