எதிர்வரும் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த பலமான கூட்டணியாகவே எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் அவர் கூறியதாவது:
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கான பேச்சுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும். அடுத்த தேர்தலை ஒரு கூட்டணியாக எதிர்கொள்வதற்கான அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கூட்டணி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தாமதம் காட்டினால், அது அவர்களுக்கு அரசியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரம்ப பேச்சுகளில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதற்கான உறுதி கோருவது, கலந்துரையாடல்களை முறிவடையச் செய்யும். ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதி ஒருவர் தனது செயல்களால் நிரூபிக்கப்பட வேண்டும்.”
