வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு:பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

226 0

வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி களப் பயணமும் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக, பிரதி அமைச்சர் பொறியியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவ, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன், பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கப்டன் தமிந்த் ரம்புக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்குழுவினரை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து, ஆளுநர் செயலகத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் இளைஞர்களுக்கான கல்வி முன்னெடுக்கல் குறித்த விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.


கலந்துரையாடலுக்குப் பிறகு, குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரில் சென்று அங்கு அன்றாட சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடமிருந்து விளக்கமறிந்தனர். விமான நிலையத்தின் தற்போதைய தேவைகள், கட்டுமானப் பணிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

Related Post

ஹட்டன் பிரதான வீதியில் கோர விபத்து – மூன்று பிள்ளைகளின் தாய் பலி.!

Posted by - February 21, 2026 0
அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சம்பவ…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
கொழும்பு மாவட்டத்தின் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப்…

சிவனடிபாத மலையில் உள்ள வனப் பகுதியில் திடீர் தீப்பரவல்.!

Posted by - February 19, 2026 0
இன்று சிவனடிபாத மலை உச்சிக்கு முன்னால் அமைந்துள்ள வனப் பகுதியில் இன்று (19) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நிலவும் கடும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று…

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

Posted by - February 20, 2026 0
காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்…

இந்தியப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி.!

Posted by - February 20, 2026 0
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (20) நண்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சந்தித்தார். AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *