நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

183 0

தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர் போர் நடவடிக்கையில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், நைஜீரியப் படையினரே அனைத்து பாதுகாப்பு முடிவுகளிலும் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பர் என்றும் அவர் கூறினார்.

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் தினத் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா இராணுவத்தினரை அனுப்பி வைப்பதை முதன் முதலாக ஒப்புக் கொண்டுள்ளது.

இதேவேளை, நைஜீரிய பாதுகாப்புத் தலைமையகத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமைலா உபா, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க அபுஜா அமெரிக்க படையினரின் உதவியைக் கோரியதாக ரொய்ட்டர்ஸிடம் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படையினர் எப்போது வருவர் என்பதைக் கூற மறுத்துள்ள அவர் அமெரிக்க- நைஜீரியா கூட்டுப் பணிக்குழுவின் கீழ் நடந்து வரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Post

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு!

Posted by - February 16, 2026 0
காசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு…

மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

Posted by - February 20, 2026 0
சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும்…

ரஷ்யா – உக்ரைன் மோதல் மீண்டும் தீவிரம்.!

Posted by - February 23, 2026 0
பெப்ரவரி 22, 2026 அன்று, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய இரவு தாக்குதலை நடத்தியது . இதில் 50 ஏவுகணைகள் மற்றும் 297 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.உக்ரைன் விமானப்படை…

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்!

Posted by - February 20, 2026 0
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான Paris நகரில் இடம்பெற்ற சாலை விபத்தில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பரிசின் வடக்குப் பகுதியான 10ஆம் வட்டாரத்தில், பார்பேஸ்–ரோஷ்சுவார் நிலையம்…

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

Posted by - February 19, 2026 0
பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *