நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கார்பன் மொனாக்சைட் எனும் விஷவாயு கசிந்ததில் அப் பகுதியில் திடீரென தீப் பரவி வெடித்துச் சிதறியுள்ளது.
சம்பவம் அறிந்து அப் பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 38 தொழிலாளர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 27 பேர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
