ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

198 0

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மத்திய அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் (Chaudhry Salik Hussain) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்துவதை ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியதுடன், கடந்த காலங்களில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி உள்ளிட்ட இலங்கை மக்கள் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதெல்லாம் பாகிஸ்தான் வழங்கிய இதயபூர்வமான ஆதரவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் போட்டியில் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவிய நேரத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பாக இலங்கை அரசாங்கத்திற்கு விசேட நன்றிகளைத் தெரிவித்த தூதுக்குழுவினர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உள்ளிட்ட அனைவருக்கும் இலங்கையில் வழங்கப்பட்ட விருந்தோம்பலையும் இலங்கை மக்களின் நட்புறவான வரவேற்பையும் பாராட்டியிருந்தனர்.

Related Post

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - February 21, 2026 0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின்…

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது.!

Posted by - February 20, 2026 0
தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன்…

தனியார் சுற்றுலா பேருந்து – இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்.!

Posted by - February 20, 2026 0
இலங்கை காவல் துறை தெரிவித்ததன்படி, யட்டியாந்தோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட தணகொலவத்த பகுதியில் தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று (20) மாலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *