ஹட்டன் பிரதான வீதியில் கோர விபத்து – மூன்று பிள்ளைகளின் தாய் பலி.!

143 0

அவிசாவளை – ஹட்டன் பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் இருந்த மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பொலிஸார் தெரிவிப்பதன்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதியுள்ளது. பின்னரும் வேகம் குறையாத அந்தப் பேருந்து, மின் கம்பத்தை உடைத்துக்கொண்டு வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் பக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற சமயத்தில், உயிரிழந்த பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் மாலை நேர வகுப்பிற்குச் செல்வதற்காக வீதியோரத்தில் பேருந்துக்காக காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அவர்கள் நால்வர் மீதும் மோதி கவிழ்ந்துள்ளது.


இவ்விபத்தில் மேலா சதுராணி குலதுங்க (46) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனத் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளும் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின்…

மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத்…

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

Posted by - February 21, 2026 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு…

இந்தியா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்.!

Posted by - February 21, 2026 0
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *